வானொலிக் குயில் மறைந்த திருமதி ராஜேஸ்வரி சண்முகத்தின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவலைகளின் வானொலிக்குயில் எனும் புத்தகம் இன்று வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இப்புத்தக வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.
ஒலிபரப்பாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்களது ஞாபகப் பதிவுகளின் கொத்தாக ‘நினைவலைகளின் வானொலிக்குயில்’ எனும் இப்புத்தகம் திரட்டப்பட்டுள்ளது.
வானொலிக் குயில் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் கடந்த வருடம் மார்ச் மாதம் 23ம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அவரது முதலாம் வருட நினைவு நாளாகும்.


