சச்சினின் மகன் தெரிவில் சர்ச்சை
இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சினின் மகன் அர்ஜுன் 14 வயதிற்குட்பட்டோருக்கான மும்பை கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டமை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் 124 ஓட்டங்கள் எடுத்தமைக்காக அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அர்ஜுனைவிட பல வீரர்கள் சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்துள்ளனர். அவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை. சச்சின் மகன் என்பதால் அர்ஜுன் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.